Tuesday, November 1, 2011

முதல் வரி! முதல் பிழை!! -1


மஞ்சள் சூரியன் மறையும் நேரம்,
பௌர்ணமி நிலவு மெல்ல மெல்ல
அந்த மாலை நேரம் வெயிலை ஆட்கொண்டு வரும் வேளையில் 
மெல்லிய இசையினை ரசித்து கொண்டிருந்தேன் 
எனது காபின்-ல் அமர்ந்த படியே!!!

பின் மணி 5 ஆகி இருந்தது

மடிக்கணினியை அணைத்துவிட்டு போட்டதை போட்டபடியே விட்டு
காரின் சாவியை தேடி கொண்டிருந்தேன்

நல்ல வேலையாக எப்போதும் எங்கு மறந்து வைப்பேனோ
அங்கு தான் இன்றும் வைத்திருந்தேன்


நான் காரில் பயணிக்கும் நேரத்தில் என்னை பற்றி சில:

நான் சுனில் என்கிற சுனில் குமார், சொந்தமாக தொழில் செய்து கொண்டு இருப்பவன் ரொம்ப நல்லவனும் இல்லை, ரொம்ப கேட்டவனும் இல்லை இது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சாதாரண இளைஞன்

நல்ல வசதியான வாழ்கை,
கை நிறைய வருமானம்,
கௌரவமான குடும்பம்
இது தான் என் வாழ்கை சுருக்கம்

இப்படி ஓர் இதமான வேளையில் ஈ.சி.ஆர்  ரோட்டில் காரில் பயணித்து கொண்டிருந்தேன், எங்கு செல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை மனம் போன போக்கில் எனது கார் சென்று கொண்டிருந்தது

காரின் உள்ள மெல்ல ஒலிக்கும் சிநேகிதியே பாடல் வெளியில் இதமான மழை மனதிற்கு இனம் புரியாத சந்தோஷம், சோகம், கவலை அனைத்தும் என்னை குடிகொண்டிருந்தது அது ஏன் என்று புரியவில்லை??

இடது புறம் எந்த பக்கம் திரும்பினாலும் கடற்கரையில் அந்த சாலை நின்றுவிடும் என்று எனக்கு நன்றாக தெரியும், இருந்தும் மனம் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு கடற்கரையை தேடியது இறுதியில் நான் நினைத்த மாதிரி இடத்தை அடைந்தேன்,

மழை ஒன்றும் பெரிதாக பொழியவில்லை என்றாலும் உடலை நனைக்க அது போதுமானதாக இருந்தது, காரிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்

அப்போது என்னையும் கண்டுகொள் என்று எனது கைபேசி ஒலித்தது 
அதில் ஸ்வேதா அழைத்தாள்!!

ஸ்வேதா எனது காதலி நானும் அவளும் நான்கு வருடங்களாக காதலிக்கின்றோம் எங்களது காதல் இருவரின் பெற்றோருக்கும் தெரியாது
(பெற்றோருக்கு தெரியாமல் காதலிப்பதில் தானே சுகம் இருகின்றது, அப்படியே அவர்களிடம் சொன்னாலும் சேர்த்து வைக்கபோவதில்லை??)

கைபேசியை எடுத்து பார்த்தேன்

" இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் " என்று வந்திருந்தது

அந்த வாழ்த்துக்கு பதில் தெரிவிப்பதா, இல்லை வேண்டாமா என்று
கடிகாரத்தில் ஆடும் முள் போல மனம் இரு புறமும் ஆடிகொண்டிருந்தது
கைபேசியை அப்படியே வைத்து விட்டு

மனம் அப்படியே மெல்ல பின்னோக்கி பயணித்து கொண்டிருந்தது,

நான்கு வருடத்திற்கு முன்னால்?


மணி காலை 8:00

அவசர அவசரமாக எழுந்து பல்லை அரைகுறையாக விளக்கி விட்டு,
ஒரு காக்கை குளியல் போட்டுவிட்டு என் அறையை விட்டு வெளியில்
வரும் முன் அரை மணி நேரம் கடந்துவிட்டது  நினைவிற்கு வந்தது

"ஐயோ தாமதமாக போனால் அந்த சறுக்கு மரம் உள்ளே விட மாட்டனே"
என என்னை நானே கடிந்து கொண்டேன்
(சறுக்கு மரம் எனது எமன் 2  வாத்தியார், அதாங்க maths 2 teacher)

எப்படியோ ஒரு வழியாக 9 மணிக்கு அரக்க பறக்க வந்து  சேர்ந்தேன் 

உள்ளே நுழைந்ததும் பேரதிர்ச்சி காத்திருப்பது அப்போது எனக்கு
தெரியாது

வகுப்பறையின் உள்ளே ஒவ்வொருவரும் ஏதோ ரஜினி படத்திற்கு
கதை எழுதுவது போல் கிறுக்கி கொண்டிருந்தனர்

அருகில் சென்று பார்க்கும் பொது தான் தெரிந்தது, அது அவர் கடைசி
வாரம் கொடுத்திருந்த வேலை என்று

இந்த நேரத்தில் என் நண்பன் விக்கி என்னை அழைக்க

"என்னடா சுனில் வொர்க் எல்லாம் முடிச்சுட போல ரொம்ப தைரியமா
சுத்துற"


"நீ வேற வாய கேளராத, இந்த வேலையே இபோ தான் எனக்கு நியாபகம்
வந்தது"

"மச்சி வேலைய முடிக்காட்டி, இன்னைக்கு முழுக்க கிளாஸ்-கு வெளில
தான்டா அத மறந்துடாத"

என அவன் பாட்டுக்கு எழுத ஆரம்பித்துவிட்டான்

ஏற்கனவே உள்ள புகைஞ்சு கிட்டு இருக்கு, அதுல எவன் வேற கரி அள்ளி
கொட்டுறான்

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு அவருக்கு மதியதுக்கு மேல் தான் வருவார்
அதற்குள் சுதா விடம் சென்று எழுத சொல்ல வேண்டியது தான்

சுதா எனது சிறு வயது தோழி, என்னை பற்றி நன்கு தெரிந்தவள் இவள்
அடிக்கடி என்னை வீட்டில் காப்பற்றுபவள் இவள் தான்

இவள் தந்தையும், எனது தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணி புரிகின்றனர்
எனது பக்கத்துக்கு வீடு வேறு

அவளது கிளாஸ்-ற்கு சென்றேன் அவளது  தோழிகள் தான் இருந்தர்கள் அவர்களுக்கு எங்கள் நட்பை பற்றி நன்கு தெரியும்

அதனால் எனது கண்கள் அவளை தேடுவதை அறிந்த அவளது தோழிகள்
அவள் இன்னும் வரவில்லை என்று சத்தமாக சொன்னார்கள்

அப்போது தான் என் நினைவுக்கு வந்தது, அவள் இன்று விடுமுறை என்று

என் விதியை எண்ணிக்கொண்டு வந்தேன்

வரும் வழியில் என்னை தள்ளிவிட்டு ஒரு பெண் வேகமாக ஓடினாள்

அவள் முகத்தை பார்க்கும் முன்னரே அந்த பக்கம் திரும்பிவிட்டாள்

நான் அவளை பின் தொடர்ந்து சென்றேன், கண்ணில் சிக்கவில்லை

அவளை தேடிக்கொண்டு அலைந்தேன்


தேடல் தொடரும்... 



No comments:

Post a Comment